Friday, May 30, 2008

இன்னுமொருவனும் கற்பழித்தான்.


எந்த தாட்சன்யமுமின்றி
நான் மீளவும் வல்லுறவுக்குள்ளானேன்.


கேவலத்தால் கசிந்து கிடந்தயென்
கருப்பைக்குச் சொந்தமான குருதியின் சாட்சியாய்
நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன்.


ஆயிரம் திசைகளாய் என்னையிழுத்து
அவரவர் விருப்பம் போல்
அக்குள் தொடக்கம் அனைத்தும் வரை
வெறிபிடித்த நாயின் வேகத்தில் குதறித்தள்ளினர்.


நான் பெத்துப் போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.


இடைவேளையின்றி
காபிர்களே படுத்தெழும்பிய என்னில்
சுன்னத் செய்யப்பட்ட கயவனும்
தாரளமாய் விழுந்தெழும்பினான்.


இறுதியாய் இன்று பகலும்,

மூட்ப்படாத நீள ஆடைகளைந்து
அகிம்சா தர்மத்தின் போர்வையும்
என்னைக் குதறியெடுக்க மன்றில் நிற்கிறது.

நான் பெத்துப்போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.

26.05.2008

1 comment:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

எவ்வளவு ஆழம் பொதிந்த கவிதை இப்படி பார்வையிடப்படாமல் கிடக்கின்றது

கனத்து மனதுடன் வாசித்தேன் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..