Monday, June 9, 2008

காறித் துப்பி எழும்புவோம்


அறிவாக நினைத்ததெல்லாம்
மையத்துக்களை விருந்தாகத் தந்தது.
என்னை நிறப்பி ஒட்டி சீர்செய்யும் உன்
அனைத்து கைங்காரியங்களும் சிதறிப்போயின.

உன் இதுவரைக்குமான ஜீவிதத்தில்
நீ கேட்டதெல்லாம்
உன்னை அதிகாரப்படுத்தியே.


உன்னை ஒதுக்கிவைத்து விட்டு
எந்த அறிவினையும் நாங்கள் பெற்றிடாத படி
நீ
எங்களில் உன்னை
உறுதியாய் வார்த்திருக்கிறாய்.


நாங்களிழந்த கால்களினாலே
உன்னை எட்டியுதைத்து
உன் மொத்த இருப்பின் மீதும்
காறித் துப்பி
நாங்கள் திடமாய் எழும்பிவோம்.


என் தேசத்தின் அனைத்திற்குமாய்
எங்களிலிருந்து நாங்கள் எழும்புவோம்.

30.05.2008

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..