Monday, June 9, 2008

நாட்கள் மெலிந்தன

அனைவரும் போல நீயுமானாய்.


பகல்களை சூரியனிடமிருந்து பிடுங்கி

அனைத்தினையும் இருளாக்கிடும் விடயமாய்
நான் இதை நினைத்திருக்கவில்லை.


என்னிலைகளை புரிந்து கொண்டு
காலமெல்லாம் நீ பேசிய அனைத்தையும்
மறந்து
உன்னிலை காப்பிற்காய்
துக்கியெறிந்து முகம் மாற்றி
நீண்ட வெளியில் எதுவுமற்று என்னை
உன்னால் நிரப்பிவிட்டு சென்றாய்.

இருப்பினும்,
நீயும் உன் நினைவுகளும்
குளிர் காலத்து உன் சிறகுகளும் போதும்.
என்னை முந்தியடித்து
உன்னோடு எனக்குள் வாழ்வேன்.

நாட்கள் மெலிந்து கிடக்கின்றன.

01.06.2008.

1 comment:

ஜமாலன் said...

கவிதைகளும் அதற்கான படங்களும் பொறுத்தமாக உள்ளது. ஆனால் உங்கள் கவிதைக் குரலின் சோகம் ஒரு செயலூக்கமுள்ள மௌனமாக உள்ளது.

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..