Monday, June 9, 2008

கொலைகளின் தேசத்தில் பிறந்தேன்.


எனது இரவுகளை
தூக்கமென்ற அடர்ந்த உலகினுள் புதைக்காமலும்
எனது பகல்களை
சோம்பலேறிப்போன வேலைத்தளத்தினுள்
அடமானம் வைக்காமலும்
எனது இன்றைய நாட்கள் நகர்கின்றன.

கரை தட்டும் கடலின் ரகசியம் போல்
ஒவ்வொரு நிமிடமும்
புதிர்களும் வினாக்களும் நிறம்பிய உலகமும்,
என்னில் விழுந்து விழுந்து எழும்புகிறது.

கனவுகளின் காலைகளை
இராட்சத விலங்கொன்று விழுங்கிற்று.
சமாதானம் பேசச்சென்று
வெட்டுண்டு விட்டதன் செய்திகளே
காலை அழைப்பாக தொலைபேசியில்.

உதடுகள் இரண்டினையும் இறுக மடக்கி
விரல்களைப் பொத்தி கைக்குள் வைத்து
உன்னைக் கேட்கிறேன்.

கொலைகளின் தேசத்தில் ஏன் பிறப்பாக்கினாய்.

07.06.2008

1 comment:

rahini said...

ovoru kavi varikalum sinthika vaiththau
anpudan
rahini
germany

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..